தஞ்சாவூர் மார்ச் 31.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் உள்ள நூலக பனுவல் அரங்கில் சம காலத்து சமூகத்தில் விருப்பங்கள் மற்றும் தேவைகள் பற்றிய தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கின் ஒருங்கிணைப் பாரும்,உதவி பேராசிரியர் முனைவர் அறிவானந்தன் அனைவரையும் வரவேற்றார்.
பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார் .வளர் தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
கடல் சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் செல்வகுமார் தொகுப்புரை வழங்கினார்,
பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராமஜெயம், அழகப்பா பல்கலைக்கழக சமூகத்துறை தலைவர் வேலுசாமிஆகியோர் பேசினார்கள்
நிறைவாக சமூக அறிவியல் துறை இணை பேராசிரியரும் தலைவருமான சங்கீதா நன்றி கூறினார்.
நிகழ்வில் முனைவர் பட்ட ஆய்வாளர் ராதா இணைப்புரை வழங்கினார் நிகழ்வில் 140 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்



