மயிலாடுதுறை மாவட்டம் மே:24
மயிலாடுதுறை அடுத்த வழுவூரில் அஷ்டவீரட்ட தலங்களில் ஒன்றான வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானை வடிவிலான அசுரனை கிழித்து சம்காரம் செய்து ஆடையாக இறைவன் அணிந்த இடம் என்பதால் வழுவூர் என்று அழைக்கப்படுகிறது. குருவின் பார்வையில் சனி பகவான் அமைந்துள்ள இந்த இடம் சிறந்த சனி பரிகார ஆலயம் ஆகும். ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன ஒரு மண்டலம் நடைபெற்ற அபிஷேகங்களின் பூர்த்தி விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இதனை தொடர்ந்து மண்டல அபிஷேக பூர்த்தி விழா இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு நவகிரக சாந்தி ஹோமம் மகாமிர்த்யுஞ்சய ஹோமம் சுதர்சன ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டது இதில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வி ஜி கே செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.