வேலூர், ஆகஸ்ட் 12 –
வேலூர் அடுத்த தொரப்பாடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ நாடவாழியம்மன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆடி மாத திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், கரக ஊர்வலமும், கூழ் வார்த்தல் திருவிழாவும், அம்மன் திருத்தேர் வீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஊர் நாட்டாண்மை டி.வி. சிவராமன், ராஜேந்திரன் என்கிற ராஜன், ராஜி, பாஸ்கர், மதன், ராஜேஷ், சிவபாலன், மோகன், பிரகாஷ், தமிழ் என்கிற சீனு மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர், இளைஞர் அணியினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



