தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்காக பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண்திட்டம், விடியல் பயணத்திட்டம், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்படு வருகிறது. மேலும் மக்களைத்தேடி மருத்தவம் இன்னுயிர் காப்போம்/நம்மைக்காக்கும் 48 போன்ற திட்டங்களும் மக்களின் நலனுக்காக நடைமுறையில் உள்ளது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மூதாதையர் பழமொழி மக்கள் நல்வாழ்வு என்பது சமுதாயத்தில் முக்கிய பங்காக உள்ளது. பொதுமக்களை பாதுகாப்பதிலும் குறிப்பாக பெண்கள் நலன் பராமரிப்பதிலும் நமது அரசு விரைந்து முன்னேறி வருகிறது இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட. ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
இம்முகாமில் பால்வினை நோய்கள், கருப்பை வாய் பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மகப்பேறு மருத்துவம் ,கண் மருத்துவம், தோல் மருத்துவம், சித்த மருத்துவம், காச நோய் காது, மூக்கு, தொண்டை மருத்துவம் பல் மருத்துவம் போன்ற சிகிச்சைகளும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் ஆய்வகம் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மக்களை தேடி மருத்துவ பெட்டகம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் , வட்டார மருத்துவ அலுவலர் மோதி , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் அபிஷேக், சுந்தர பாண்டிபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பண்டாரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் , பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.