தொண்டி மேற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நல்ல ஆசிரியர் விருது பெற்ற சாந்தி முருகானந்தம் ஓய்வு பெறுவதை ஒட்டி அவருக்கு தமுமுக சார்பில் பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் பிறந்த தினமான ஏப்ரல் 27ஆம் தேதி அன்று விருது வழங்கி பாராட்டுகள் தெரிவித்தனர். தமுமுகவின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தலைமை வகித்தார். தமுமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஓய்வு பெறும் நல்லாசிரியர் சாந்திக்கு வாழ்த்துக்கள் கூறினர்.



