சிறப்பு லேகியம் மூலம் கருப்பை இறக்கம் சரியாகி மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வழிமுறை!
பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை
ராமநாதபுரம், ஆக.2-
பெண்கள்
ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு லேகியம் மூலம் கருப்பை இறக்கம் சரியாகி மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வழிமுறை உள்ளது. அதை அனைவரும் பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்று பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;
பெண்களுக்கு மிக முக்கியமான உடல் உறுப்புகளில் கருப்பையும் ஒன்று. அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு இந்த கருப்பை மிக முக்கிய காரணமாக அமைகிறது.
கருப்பையில் கருக்குழல் அடைப்பு, நீர்க்கட்டி, அதிக உதிரப்போக்கு, மாதத்துடக்கு நிகழாமை, வெள்ளைப்படுதல், கருமுட்டை வளராமை, குழந்தை பாக்கியமின்மை, உறவின் போது வலி என்று பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்…
இதற்காக பல மருத்துவ முறைகளை கையாண்டும் சரியாகவில்லை என்றால் பிரச்சனைதான். சிலர் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இப்படி மாத்திரை மருந்துகளை சாப்பிடுவதின் மூலமாக கருப்பை தன் சக்தியை இழந்து வெளியே இறங்கி விடும். இதனையே கருப்பை இறக்கம் என்று கூறப்படுகிறது. இதனை சரி செய்ய முடியாமல் வெட்டி எடுத்து விடுவார்கள். தொடர் உதிரப்போக்கினாலும் கருப்பை செயலிழந்தால் அப்போதும் கருப்பையை நீக்கி விடுவார்கள். இது நடைமுறையில் உள்ள வைத்தியமுறை.
ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்பான முறையில் மருந்து சாப்பிட்டு கருப்பை இறக்கம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லது கருப்பை இறங்கியவர்கள் இந்த மருந்தை செய்து சாப்பிடுவதால் கருப்பை பழைய நிலைக்கு சென்று நிலைத்து விடும். மீண்டும் இறக்கம் ஏற்படாது. இந்த லேகியத்தை கருப்பை இறங்கியவர்களும் அதிக உதிரப்போக்கு உடையவர்களும், மூல வியாதி உள்ளவர்களும் சாப்பிட்டு பயனடையலாம்.
இந்த லேகியத்தை தயார் செய்ய கைப்பக்குவமும், அளவும் சரியாக இருத்தல் வேண்டும்.
தேன் 250 மில்லி
மிளகு 50 கிராம்
ஓமம் 50 கிராம்
தேக்குமர விதை 75 கிராம்
கசகசா 50 கிராம்
தேனை தவிர்த்து உள்ள பொருட்களை தனித்தனியாக அரைத்து பொடி செய்து துணியில் வைத்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சட்டியில் பசுநெய் 50 மில்லி ஊற்றி அதில் தேனை ஊற்ற வேண்டும்.தேன் சூடானதும் அதில் சலித்து வைத்த பொடிகளை ஒவ்வொன்றாக போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கடைசியில் நெய் லேகியத்திலிருந்து வெளியே கக்கும். அப்பொது சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும்.
தினமும் காலை இரவு 3 கிராம் வீதம் இந்த லேகியத்தை சாப்பிட்டு வந்தால் 48 நாட்களில் கருப்பை இறக்கம் சரியாகி விடும்.
இந்த மருந்து செய்ய இயலாதவர்கள் இராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் ரோட்டில் உள்ள சுகம் ஆயுர்வேத வைத்தியசாலையில் நேரில் சந்தித்து பெற்று கொள்ளலாம், இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.