நாகர்கோவில் மே 27
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியில் ஏ ஜே எம் பவுண்டேஷன் தன்னார்வல அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஏஜேஎம் பவுண்டேசன் தன்னார்வல அறக்கட்டளையின் ‘மரக்கன்றுகளை நடுவோம், காடுகளை உருவாக்குவோம்’ திட்டத்தின்படி இயற்கையை பேணி காக்கும் முயற்சியாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஏஜேஎம் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வகையான நாட்டுமரங்களை நட்டு அதை முறையாக பராமரித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியில் தேக்கு, மகாகனி, வேங்கை, மஞ்சகடம்பு, மா, பலா, நாவல் உள்ளிட்ட 150 மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் ஏஜேஎம் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், தன்னார்வலர்கள் அனிட்டர் ஆல்வின், கரிகாலன், ரூபன், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.