குலசேகரம் நவ 3
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்நிலைகள், அருவிகள், மலைப் பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த கன மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்டம் நிர்வாகம் தடை விதித்து இருந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.