சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார், முன்னாள் கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.



