சேலம்
சேலத்தில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ,கோவை அணிகள் மோதுகின்றன. டி என் பி எல் கிரிக்கெட் தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடராக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது அதன்படி இந்த ஆண்டு எட்டாவது சீசன் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சேலத்தில் தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் பாபா டிஎன்பிஎல் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன் ஆகியோர் சேலத்தில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது 2024 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகின்றது. சேலத்தில் ஐந்தாம் தேதி முதல் 11-ம் தேதி வரை 9 போட்டிகள் நடக்கின்றன அதன் பிறகு கோவையில் ஜூலை 13ஆம் தேதி முதல் 18-ம் தேதி வரையும் திருநெல்வேலியில் ஜூலை இருபதாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையும் திண்டுக்கல்லில் ஜூலை 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையும் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன .30ஆம் தேதி முதலாக தகுதிச்சுற்று 31ம் தேதி வெளியேற்றுதல் சுற்றும் திண்டுக்கல்லில் நடக்கின்றன. அதன் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது தகுதி சுற்று போட்டி ஆகஸ்டு இரண்டாம் தேதியும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியும் நடக்கிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைக்கா கோவை கிங்ஸ் ,சீகம் மதுரை பாந்தர்ஸ், எஸ் .கே. எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ,திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடகின்றன ஏற்கனவே நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 13 வீரர்கள் ஐபிஎல் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. போட்டிகள் நடக்கும் நாட்களில் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 2 போட்டியில் நடைபெறும் பிற்பகல் 3 15 மணி முதல் போட்டியும் இரவு 7:15 மணிக்கு இரண்டாவது போட்டியும் தொடங்கும் சேலத்தில் அடுத்த மாதம் ஜூலை ஐந்தாம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் லைக்கா கோவை கிங் அணியும் மோதுகின்றன .இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் ,முரளி விஜய், நடராஜன் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும் தொடரில் விளையாடுகின்றனர் .இவ்வாறு அவர்கள் கூறினர் இந்த போட்டியின் போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி டி .என் .பி. எல் கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் தினேஷ்குமார், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் இயக்குனர் செல்வமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ் ,செயலாளர் பாபு குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


