மயிலாடி அருகே உள்ள மயிலாடி புதூர் வைகுண்டர் சாலை பகுதியை சேர்ந்தவர் மேரி வயது 45, இவரது கணவர் காலமானதால் மகன் கோபியின் வீட்டில் வசித்து வந்தார். சம்பவதன்று தனது மருமகன் சதீஷ்- உடன் மேரி மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கோட்டாரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ரமம் பகுதியில் சென்றபோது மேரி நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேரியின் மகன் கோபி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.


