மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றிய ஆனையூர் வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் க.செல்வகுமரேஷன் தலைமையில்
8,9,10 ஆகிய மூன்று நாட்களில் முதல் நாள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோ.மனோகர் மற்றும் ஒச்சுகாளை முன்னிலை வகித்தனர். வாழ்த்துரையாக
ஜேம்ஸ் ராஜா , முத்து லெட்சுமி மற்றும் ஜெபதுரை , சிவபாலன், தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டனர்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக
அரசாணை 243 ஐ உடனடியாக இரத்து செய், 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த நடைமுறையை மாற்றாதே, புதவி உயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை
கலந்தாய்வை நிறுத்தி வை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம். கவிதா
நன்றியுரை வழங்கினார். ஆனையூர் வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் டிட்டோ-ஜாக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.