திருப்பூர், டிச. 01 –
மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை விளைநிலங்கள் மற்றும் பொது இடங்கள், சாலைகளில் காலியாக உள்ள இடங்களில் வீசி செல்வதை தடுக்கும் வகையில், வாடிக்கையாளா்கள் வாங்கி சென்று மது குடித்த பிறகு காலி மதுபாட்டில்களை சில்லரை விற்பனை கடைகளில் ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அமலுக்கு வந்துள்ளது.
இந்த நடைமுறை திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார் உரிமையாளா்கள் நேற்று திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பார் உரிமையாளா்கள் கூறியதாவது: திருப்பூரில் பல்வேறு இடங்களில் பலரும் பார் டெண்டா் எடுத்து நடத்தி வருகிறோம். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள காலி மதுபாட்டில் கொடுத்தால் ரூ.10 திருப்பி கொடுக்கும் திட்டத்தால் அனைவரும் பாட்டில்களை கொண்டு செல்வார்கள்.
இதனால் எங்களுக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்படும். கடந்த காலங்களில் டெண்டா் எடுக்கும் போது, எதுவுமே கூறாமல் தற்போது இந்த நடைமுறை கொண்டு வந்துள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பார் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். உடனே திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவா்கள் கூறினா்.



