திருப்பூர், நவ. 15 –
திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்கும் நோக்கில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு, பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நபர்களை குன்னத்தூர் காவல் ஆய்வாளர் சுசீலா தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து பிடித்து 11 நபர்களை கைதுசெய்தும், ரூ. 31,060/- பணம், இருசக்கர வாகனங்கள்-07 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-04 ஆகியவற்றை கைப்பற்றி மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


