அரியலூர்,மே:28
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துசாமி மகன் கோவிந்தசாமி(56) இவர் முன்னால் ராணுவ வீரர் ஆவார். உலகநாதன் மனைவி முத்துலெட்சுமி(55), கனகசபை மகன் ராஜேந்திரன்(65). இவர்களது வீடுகள் அருகருகேயுள்ளது. இந்நிலையில், நேற்று 3 வீட்டில் உள்ள நபர்களும் வேலை சம்மபந்தமாக வெளியே சென்று விட்டு மதியம் வீட்டுக்கு திரும்பிய போது 3 வீடுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, முத்துலட்சுமி வீட்டில் ரூ.5,000 பணம் திருடப்பட்டுள்ளது. மற்றவர்கள் வீட்டில் பணம், நகை மறைவாக வைக்கப்பட்டிருந்தால் மர்மநபர்களின் கண்களில் படவில்லை. இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



