திருப்பூர். ஏப்ரல்: 2 மாநகராட்சிபள்ளி நொய்யல் வீதி பகுதியில்
திறந்த வெளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு அதிகாலையில் சிறப்பு தொழுகை செய்தனர். தொழுகையின் போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்
என்ற உயர்ந்த சிந்தனை வளர வேண்டும். ரம்ஜான் பண்டிகை மட்டும் இன்றி எப்போதும் பாகுபாடு இன்றி உதவி செய்யும் உயர்ந்த எண்ணத்தோடு அனைவரும் சமம் என்று கருதி வாழ வேண்டும் என்று சிறப்பு போதனைகள் வழங்கப்பட்டன. இந்த பண்டிகை சிறப்புத் தொழுகை ஏற்பாடுகளை திருப்பூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.



