குளச்சல், ஜன. 5 –
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் குமரி மாவட்டத்தில் பைங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நண்பரின் முகநூல் கருத்துக்கு தனது பதிவை கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்துக்கு வேறொரு நபர் எதிர் கருத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் அந்த நபர், பைங்குளம் நபர் தனது மகளுடன் இருக்கும் படத்தை பதிவிறக்கம் செய்து, வெளியிட்டு தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பதிவு செய்து இருந்தார். இதை பார்த்த பைங்குளம் நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக ஆபாசமாக பதிவிட்ட அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு பரிந்துரை செய்தனர்.
இதை அடுத்து மகளிர் போலீசார் ஆபாச பதிவிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் ஆபாச பதிவிட்டவர் மார்த்தாண்டம் சாங்கை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் (46) என்பவரை போக்சோவில் போலீசார் கைது செய்து செய்தனர்.



