கன்னியாகுமரி அக் 21
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடை விதிக்கும் வகையில் திருவேணி சங்கமத்திற்கு செல்லும் பாதை அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்ல முடிவதில்லை.
மாற்றுத்திறனாளிகளும் மனிதர்கள் தானே அவர்களும் கடற்கரைக்கு சென்று கடல் அலையையும்,ரசித்துப் பார்க்க வேண்டாமா? சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக விசேஷ பாதைகளை தமிழ்நாடு அரசு சார்பில் போட்டதினால் தினந்தோறும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வருகின்றனர். ஆனால் கன்னியாகுமரியில் அதற்கு நேர் எதிர்மறையாக நடைபெற்று வருவது வேதனையான ஒன்று
எனவே மாவட்ட நிர்வாகம் திரிவேணி சங்கமத்திற்கு செல்லும் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலர் சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.