போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருகோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து ஸ்ரீ பூமி. ஸ்ரீ நிலா சமேத ஸ்ரீ சென்ராய பெருமாள் சுவாமி திருக்கோவில் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று புதிய சாமிகள் கங்கை பூஜை பகவத் பிரார்த்தனை ஆட்சி அறிய வர்ணம் ஓமங்கள் பேரிபூஜை மற்றும் புனித தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதை தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு புனித தீர்த்த குடம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து புனித தீர்த்த குடம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர் இதை தொடர்ந்து பின்னர் பெண்கள் சாமி ஆடி படி கோவில் வந்து அடைந்தனர் இதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வேதம் உலக ராகம் தானம் வாதியாம் இசைமுழங்க விருச்சிக லக்கனத்தில் கோபுர விமானம் முலம் அருள்தரும் ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருக்கோவில் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதில் பெண்கள் மற்றும் பாப்பாரப்பட்டி குலதெய்வ பங்குதாரர்கள் மற்றும் மாமன் மைத்துனர்கள் ஊர் பொதுமக்கள் பண்ணந்தூர் பாப்பாரப்பட்டி, குலதெய்வ பங்காளிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்



