அரியலூர்,ஜூலை:05
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள் விழா” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி 18.07.2024 தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 09.07.2024 செவ்வாய் கிழமை அன்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். போட்டிக்கான தலைப்புகள்: கட்டுரைப்போட்டி- ஆட்சிமொழி தமிழ். பேச்சுப்போட்டி– 1. குமரி தந்தை மார்சல் நேசமணி, 2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/–, இரண்டாம் பரிசு ரூ.7,000/–, மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000/– என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது. மேலும் கட்டுரை/ பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளலாம். எனவே அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்