ஆலய ஊழியர்கள் 12 வது நாள் தொடர் போராட்டம்
கன்னியாகுமாரி மாவட்ட திருக்கோவில்கள் ஊழியர்கள் தங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய நிர்ணய குழுவின் பரிந்துரை 1998 அரசாணை எண் 257 படி சம்பளத்தை நிர்ணயம் செய்து உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடும்பத்தோடு கடந்த 12 நாட்களாக இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்தப் போராட்டத்திற்கு பல அமைப்புகள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆதரவு வழங்கி வருகின்றனர் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இந்த போராட்டத்தை தீவிர படுத்த சி ஐ டி யு மாநில செயல் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நேற்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் அதன்படி நேற்று காலை சுசீந்திரத்தில் உள்ள இந்து அறநிலைத்துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார் மின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் சிஐடியு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகன் தலைவர் சிங்காரம் பொருளாளர் சித்ரா கோயில் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் செயலாளர் அஜித் குமார் ஆகியோர் தலைமையில் கோவில் ஊழியர்கள் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நான் ஊருக்கு மேற்பட்டவர்கள் மறியலுக்கு திரண்டனர் இதனால் அங்கு பரப்பரப்பு ஆன சூழ்நிலை ஏற்பட்டது இதை எடுத்து முன் எச்சரிக்கைக்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமாரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் பின்பு மறியலுக்கு வரும்போது கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் பின்பு அங்கிருந்து இணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றனர் இதில் இணை ஆணையர் பழனி குமார் திருநெல்வேலி இணையானையர் கவித கவிதா பிரியதர்ஷினி உதவியாளர் தங்கம் ஆகியோர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஏற்கனவே சென்ற மாதம் சம்பளம் வழங்காமல் தொழிலாளர்களை வஞ்சிப்பதாக கூறினார் உடனடியாக சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார் மேலும் தங்கள் கோரிக்கையான சம்பள உயர்வு பற்றி அவர்களிடம் பேசினார்கள் அதற்கு அனைவருக்கும் ஒரே விதத்தில் சம்பளம் வழங்குவது இல்லை இந்தச் சம்பள விகிதமே தமிழ்நாடு முழுவதும் உள்ளது என கூறினார்கள் தங்கள் கோரிக்கையை மேல்மட்டத்திற்கு அனுப்பி வைக்கும் படியும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது