தென் தாமரை குளம் ., அக். 25.
குமரி மாவட்டம் பொற்றையடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார். பொற்றையடி அருகே உள்ள மந்தாரம்புதூரை சேர்ந்தவர் தனேஷ் (வயது 33).இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நாகர்கோவில் பீச்ரோட்டில் பைக் ஒர்க்சாப் சொந்தமாக நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரம் பைபாஸ் ரோட்டில் இடதுபக்கமாக வந்து கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் பகவதியம்மாள் கொடுத்த புகாரின் படி தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து. தனேஷ் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.