இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவரும் தேசிய பொதுச் செயலாளரும் முரளிதரன் அவர்கள் தலைமை தாங்கினார் .
மாநில கூட்டமைப்பின் துணைத் தலைவரும் அதியமான் தருமபுரி ஓட்டுநர் பயிற்சி பள்ளி கூட்டமைப்பின் தலைவருமான ராவிக் ஜான், செயலாளர் சரவணன், கூட்டமைப்பின் பொறுப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த மாநில பொதுக்கூட்டத்தில் தற்போது தேசிய அளவில் மாநில அளவிலும் ஆண்டுதோறும் பெருகிவரும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்தோடு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகமெங்கும் சிறப்பான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
பெருகி வரும் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்தோடு இந்த கூட்டமைப்பின் சார்பில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலங்கும் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது
முறையான ஓட்டுநர் பயிற்சி மற்றும் தரமான ஓட்டுநர் உரிமை தேர்வினால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும் என்பதால் மேம்பாட்ட ஓட்டுனர் பயிற்சியினை வழங்குவது எனவும் தரமான, முறையான ஓட்டுனர் உரிமைத் தேர்வு நடத்தி அதற்கு பின் உரிமைகளை வழங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்துவதில் என தீர்மானிக்கப்பட்டது.
ஏ டி டி சி பயிற்சி மையங்களை தமிழகத்தில் அமைப்பது குறித்து இந்த கூட்டமைப்பு கொடுத்துள்ள வழக்கு தற்போது வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவில் உள்ளதால் இந்த வகை பயிற்சி பள்ளிகளுக்கான விண்ணப்பங்களை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பெறக்கூடாது என மாநில போக்கு இல்வரத்து துறை தீர்மானங்களில் கேட்டுக் கொண்டனர் .
தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பில் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



