சென்னை, ஏப்ரல் 09 –
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, மலேசியாவின் யுனிகாம் கல்லூரியுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் பூமிநாதன், மலேசியாவின் யுனிகாம் இயக்குநர் உமர் அப்தில்லா அன்வர், மலேஷியாவின் ஃபியூச்சர் ட்ரீம் அகாடமியின் தலைவர் கலையரசன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜெய்நானக் சிங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியின் தலைமை செயல் அலுவலர் பானுமதி, இயக்குநர் சுரேன், துறை பேராசிரியர் அருண் மற்றும் கல்லூரி முதல்வர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன் இது தொடர்பாகக் கூறியதாவது: சர்வதேச அளவில் நாங்கள் மேற்கொண்டிருக்கும் கூட்டாண்மைகள் பல்வேறு நிறுவனங்களுடன் விமான நிலையம் உள்ளிட்ட நிஜமான விமான மாதிரி, சிறிய அளவிலான விமான நிலையம் சிறப்பு கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு நடைமுறை வழியிலான கற்றலை சாத்தியமாக்குகின்றன. இதன் மூலம் விமானவியல் இறையில் பணியாற்றுவதற்கேற்ற சிறந்த திறன் கொண்டவர்களாக எமது மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.
விமானப் போக்குவரத்து துறையில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை சுட்டிக்காட்டி அவர், 2035 ஆம் ஆண்டிற்குள் விமானிகள், கேபின் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் தரை தளபணியாளர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த சுமார் 1.5 முதல் 2 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.



