திருச்சி, ஏப். 29 –
திருச்சி பெரிய செட்டி தெருவில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு, கடந்த 25ம் தேதி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் வாடகை காரில் பெங்களூர் சென்று, அங்கிருந்து மகாராஷ்டிரா தப்பித்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, திருச்சியில் இருந்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.


