ஈரோடு, செப். 6 –
மனிதநேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா ஈரோடு திருநகர் காலனியில் நடந்தது. விழாவில் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது ஈரோடு மீரான் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பாபு ஷாகின்ஷா இளைஞர் அணி மாநில செயலாளர் மஜக சமூகநீதி பாசறை மாநில செயலாளர் ரமேஷ், தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ரஹ்மான், மனித உரிமை அணியின் மாநில செயலாளர் கண்ணன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் எஹ்சான், இளைஞரணி மாநில பொருளாளர் இம்ரான், கொங்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் ஈரோடு திலீப், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல், சேலம் மாநகர மாவட்ட செயலாளர் சதாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



