விளாத்திகுளம், ஆகஸ்ட் 11 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பள்ளியின் மாணவ – மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும் வழங்கப்படும் சத்துணவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் ஆட்சியர் ஆய்வு செய்த மறுநாளே பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரம் ஒன்று சமூகவிரோதிகளால் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட மரக்கிளைகள் எதுவும் வெளியே எடுத்துச்செல்லாமல் பள்ளி வளாகத்துக்குள்ளேயே விட்டு செல்லப்பட்டுள்ளது. இந்த மரங்களை அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் தனது வணிக வளாக பெயர் பலகை மறைத்த காரணத்திற்காக மரம் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசுப்பள்ளி வளாகத்தில் உள்நுழைந்து சட்ட விரோதமாக வேப்பமரத்தை வெட்டிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



