தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி அருகில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்களின் தந்தை குண்டன் பெருமாளின் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை அதிமுக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி, கவியரசன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வீரபாண்டி கோபி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன், மேற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ்குமார், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்ணன் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ஆறுமுகச்சாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செண்பகபெருமாள் உள்ளிட்டோர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.



