தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடகரை பேரூராட்சி தலைவரும் ,திமுக செயற்குழு உறுப்பினருமான ஷேக்தாவூது ஏற்பாட்டில் வடகரையில் உள்ள அன்பு இல்லத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மதிய உணவு, புதிய ஆடைகள் வழங்கப்பட்டன.ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, ஆடைகளை தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை வழங்கினார். தொகுதி மேற்பார்வையாளர் நௌஸாத் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன், அச்சன்புதூர் பேரூர் செயலாளர் வெள்ளத்துரை, வடகரை பேரூர் செயலாளர் முகம்மது உசேன், பேரூர் அவைத்தலைவர் முகைதீன் பிச்சை, பொருளாளர்அருணாசலம், துணை செயலாளர் நூர் முகம்மது, பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் சாகுல் ஹமீது ,பாப்பா ,மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கனல்காஜா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் மாலதி ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சையது அலி ,சேக் உசேன் பீவி ,ஆயிஷா பேகம், அரபு நிஷா, வார்டு செயலாளர்கள் அப்துல் ரஹீம், சையது அகமது ,அப்துல் காதர் ,சையது முகம்மது, ரஹ்மத்துல்லா, முகம்மது அனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்



