கன்னியாகுமரி, அக். 4 –
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பெருந்தலைவர் காமராஜர் 50-வது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 பனை மர விதைகள் நடவு செய்து தெரிவித்ததாவது: அகஸ்தீஸ்வர கிழக்கு மாவட்ட ம் அஞ்சுகிராமம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ரஸ்தாகாடு கடலோர பகுதிகளிலும் அகஸ்தீஸ்வரம் மேற்கு மாவட்டம் தெங்கம்புதூர், பறக்கைகுளம், குளக்கரை பகுதிகளிலும் பனை விதைகளை நடவு செய்தோம்.
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பது போல காமராசரின் எண்ணங்களும் கனவுகளும் தரமான விதைகளாக தமிழ்நாடு அரசியல் களத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு புரட்சிகர அரசியல் மாற்றமாக முளைத்தெழும் நாளுக்காய் காத்திருப்போம். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வோம். அதற்கான உறுதியை இதுபோன்ற நிகழ்வுகளும் மகிழ்வுகளும் தரட்டும் என பேசினார்.
இறுதியாக நிகழ்வை ஒருங்கிணைத்த கன்னியாகுமரி மண்டல நிர்வாகத்திற்கும், கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினருக்கும் பனைமர பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.



