By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்
ஈரோடுமாவட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்

Last updated: June 27, 2024 9:19 am
June 27, 2024 62 Views
Share
SHARE

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில் தொடங்கியுள்ள நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்  கோபிசெட்டிபாளையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக தமிழக அரசின் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் “குறு, சிறு மற்றும் நடுத்தர கொள்கை 2021-ன்” கீழ் சிறப்பு தொழிலுக்கான முதலீட்டு மானியமாக ரூ.43 லட்சம் பெற்ற கொளப்பலூரில் உள்ள பிரிஸ்டைன் நீடில் இண்டஸ்டிரிஸ் என்ற  நிறுவனத்தை ஆய்வு செய்தார். இந்நிறுவனம் மருத்துவ துறைக்கு தேவையான டிஸ்போசபிள் சிரிஞ்ச் மற்றும் ஊசி தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த வங்கிக்கடன் மூலம் புதிய இயந்திரங்களை நிறுவுவதற்கு தமிழக அரசின் சிறப்பு முதலீட்டு மானியம் 25  சதவீதம் வழங்கப்படுகிறது.

 

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சிறப்பு திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செந்தில்குமார், முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான ரூ.25 லட்சம் முதலீட்டில் ரூ.6.12 லட்சம் மானியத்துடன் கனரா வங்கி கிளை வங்கி கடனுதவியுடன் தொடங்கப்பட்ட

ஆட்டோ மொபைல் சர்வீஸ் சென்டர் நிறுவனத்தையும் பார்வையிட்டார்.

 

மேலும், தமிழக அரசின் சிறப்புத் திட்டமான “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த செந்தில் ரூ.3.75 லட்சம் திட்ட முதலீட்டில் ரூ.1.23 லட்சம் மானியத்துடன் வாங்கப்பட்ட

மூன்று சக்கர வாகனத்தையும்  மற்றும் சேகர்  ரூ.11.97 லட்சம் திட்ட முதலீட்டில் ரூ.3.49 மானியத்துடன் வாங்கப்பட்ட வாடகை வாகனத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர்  தாட்கோ நிறுவனம் மூலமாக

முதலமைச்சர் எழுச்சி திட்டத்தின் கீழ் சுற்றுலா வாகனம் பெற்ற பயனாளி

தங்கராசு மற்றும் பயணியர் ஆட்டோ பெற்ற பயனாளி மகேஸ்வரன் ஆகிய 2 பயனாளிகளிடம் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் தங்கராசு

என்பவருக்கு சுற்றுலா வாகனம் வாங்குவதற்கு மானியமாக ரூ.2,29,159 ம்  மகேஸ்வரன் என்பவருக்கு பயணியர் ஆட்டோ வாங்குவதற்கு மானியமாக ரூ.1,17,522 ம்  வழங்கப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் சத்தியமங்கலம், பவானி, சென்னிமலை, தாளவாடி மற்றும் பவானிசாகர் ஆகிய வட்டாரங்களின் உற்பத்தியாளர் குழுவில் உள்ள 1020 உறுப்பினர்களை பங்குதாரர்களாக கொண்டு கடந்த 2022 ம் ஆண்டு  சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் இருந்து ரூ.30 லட்சம் மானிய நிதியின் மூலம் சிறுதானிய உணவகம், மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி நிலையம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடி கொள்முதல் செய்தல், மாட்டுத்தீவன விற்பனை, விதை மற்றும் உரங்கள் விற்பனை ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், உற்பத்தியாளர் குழுவில் உள்ள விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். 2023-24 நிதி ஆண்டில் ரூ.83.79 லட்சம் நிதி சுழற்சி செய்து ரூ.2.45 லட்சம் லாபமாக பெற்றுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் லாபகரமானதாகவும், தரமான சேவையையும் பெற்று வருகின்றனர்.

 

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா  வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு இந்நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட எஸ்.பி.சிறுதானிய உணவகத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும்  எஸ்.பி.சிறுதானிய உணவகத்தின் வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்து உணவகத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்ட 6 மாதத்தில் ரூ.22.60 லட்சம் வருமானம் பெற்றுள்ளது.  இந்த சிறுதானிய உணவகத்தை மேலும் கிளைகள் உருவாக்கப்பட்டு சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட மேலாளர் அர்ஜுன் (தாட்கோ), பொது மேலாளர் திருமுருகன் (மாவட்ட தொழில் மையம்), மாவட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்), செயல் அலுவலர் காமராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னைமாவட்டம்

இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

February 17, 2025 31 Views
மதுக்கடை எதிர்ப்பு போஸ்டர்
குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
மடத்தூர் கிணற்றை புராதான சின்னமாக மாற்ற நடவடிக்கை
குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?