தக்கலை, பிப்-28
தக்கலை அருகே கீழக்குளம் பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன் (65) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் சம்பவ தினம் உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடை ஒன்றில் பைக் ஏறி இறங்கிய போது, பைக் நிலை தடுமாறியதில், சுப்ரமணியன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அவரது மகள் பார்வதி என்பவர் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.