திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் நலன், சமூக பாதுகாப்பு திட்டங்கள்,மரக்கன்று நடுதல்,அணை பாதுகாப்பு மற்றும் மண் வளங்கள் சுரண்டல் தடுத்தல் பணிகளை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இதன் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் சப் யூனிவர்சிட்டியின் வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆலோசகரும், பேராசிரியருமான பியா டிரிக்ஸ் வேடசந்தூர் பெட்போர்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணிகள் மற்றும் மஞ்சள் பை முக்கியத்துவம் விழிப்புணர்வு துவங்கி வைத்தார். அதன் தொடர்பாக குடகனாறு அணையை பார்வையிட்டு அருகில் உள்ள விவசாயிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் குடனாறு பாதுகாப்பு சங்க தலைவர் டி.ராமசாமி, புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, செயற்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, பொறியாளர் செல்வராஜ் ஆகியோர்கள் வழி நடத்தினார்கள்.



