கன்னியாகுமரி ஏப் 29
கன்னியாகுமரி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர், மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் கொலையாளி கூடங்குளம் பகுதியில் வைத்து கைது.
கன்னியாகுமரி அருகேயுள்ள மாதவபுரம் பகுதியை சார்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு பரத்(17) கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார், இந்நிலையில் விஷ்ணு பரத் நேற்று இரவு மாதவபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சுவாமிநாதபுரம் பகுதி சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்துரு(21) என்பவர் மாணவர் விஷ்ணு பரத் இடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். மேலும் கையில் வைத்திருந்த கூர்மையான கம்பியை கொண்டு மாணவர் விஷ்ணுபரத்தை ஆட்டோ டிரைவர் சந்துரு குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் விஷ்ணு பிரசாத் இறந்துவிட்டார், அதனை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது
மேலும் இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தனர்,
இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் சந்துருவை கூடங்குளத்தில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், பள்ளி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.