சங்கரன்கோவிலில்
விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம
தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அடையாள அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம் நாளை மார்ச் 10ஆம் தேதி திங்கட்கிழமை காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது எனவும் , இதில் பதிவு செய்ய விவசாயிகள் ஆதார் அட்டை,பட்டா, ஆதார் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆவணங்களை கொண்டு வர வேண்டும் எனவும் விவசாயிகள் இதில் பதிவு செய்து கிடைக்கப்பெறும் புதிய விவசாயிகள் அடையாள அட்டைகள் மூலம்
இனிவரும் காலங்களில் பயிர் காப்பீடு மற்றும் மாநில அரசின் கூட்டுறவு திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும்,
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் எளிய முறையில் பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும் எனவும், வேளாண் துறைகளுக்கான பயன்களை ஒற்றை சாளர முறையில் பெறலாம் எனவும்,
இந்த முகாமின் மூலம் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் நகல் வழங்கப்படும். எனவே
விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.