மதுரை பிப்ரவரி 14,
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்
விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு அபிஷேக பொருட்களை வழங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 26ம் தேதி மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் விடியவிடிய நடைபெறவுள்ளது. மகா சிவராத்திரி உற்சவம் வரும் 26ஆம் தேதி இரவு 10 மணி முதல் மீனாட்சியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு 27ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை ஏழு கால பூஜைகள் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் விடிய விடிய அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் 9 உப கோவில்களில் சிவராத்திரி வழிபாடு நடைபெறும். மகா சிவராத்திரி அன்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளதால் பொது மக்களும், சேவார்த்திகளும், பக்தப்பெருமக்களும் அபிஷேப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26ஆம் தேதி மாலைக்குள் திருக்கோயில் உள்துறை அலுவலகத்திற்கு வழங்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



