தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனி யப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, மனோகரன் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய கழகச் செயலாளர் பிரபு ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட செயலாளர் பேசியதாவது 2026- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், இல்லம் தேடி இளைஞரணி சேர்த்தல், நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தல், கட்சிப் பணிகள் குறித்து பேசினார்.இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



