கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகம் சார்பில் முதலாவது தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.செந்தில்குமார், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், நகர செயலாளர் கனகராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரி, மாமன்னர் மருது சகோதரர் வாரிசுதாரர் ராமசாமி சேர்வை, ஐ.சி.ஓ.ஏசியா தலைவர் டாக்டர்.விக்ரம் கபூர்,தமிழ்நாடு அஷ்டடோ அகடா தலைவர் பி. செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



