ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் வங்கி பற்று அட்டையை வழங்கி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.



