தென்காசி மாவட்டம் குற்றாலம் சமுதாய நலக்கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம் – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் அதனடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தலா ஒருவருக்கு 8 கிராம் தங்க நாணயம் வீதம் 50 பயனாளிகளுக்கு ரூ.30,42,600/- மதிப்பிலான தங்க நாணயம் மற்றும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ. 1,10,768 /– மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சமுதாய வளைகாப்பின் பயனாளிகளுக்கு வளைகாப்பு செய்து தட்டு, சேலை, குங்குமச்சிமிழ், மஞ்சள் கயிறு, வளையல், தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கொய்யாபழம், நெல்லிக்காய், முருக்கு, அதிரசம், ஐந்து வகையான சாதங்கள் (சாம்பார் சாதம், தயிர் சாதம்,தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல்) போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் அனைவரும் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன்திருமலைக்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி நகர் மன்ற தலைவர் ர.சாதிர், மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, தலைமை மருத்துவ அலுவலர் மரு.மோதி, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம்) ராஜ பிரியா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் காட்வின் வேத ஞானராஜ், தென்காசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, மேற்பார்வையாளர்கள் முத்துலட்சுமி, பரிதாபானு, வட்டார ஒருங்கிணைப்பாளர் அஞ்சுகம் மற்றும் அனைத்து வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், தென்காசி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.