நாகர்கோவில்: மார்ச் 9:
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் அறிவியல் மன்றம் (Science Club) மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து பல செயல்பாடுகளில் பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அறிவியலை மக்களிடம் மாணவர்களிடம் பரப்புரை செய்வதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து நாகர்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றமானது கல்லூரியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்காக பிளானட் பரெட் (இரவு வானத்தில் ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரிவது) நிகழ்வினை கல்லூரி முதல்வர் முனைவர் பிரகாசி அருள் ஜோதி, அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்மல் விஜிலா பாய், கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் ஜெர்மன்யூஸ் அலெக்ஸ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் நாகராஜன்,மாவட்டச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மாநில துணைத்தலைவர் சசிகுமார், மாவட்ட துணை தலைவர் பெனெட் ஜோஸ், டோமினிக் ராஜ் பேராசிரியர் ஆனந்தராஜ், ஜார்ஜ், வானவில் மன்ற கருத்தாளர்கள் கலை, ஸ்ரீதா மற்றும் கேரளா அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் இயக்குநர் அருள் ஜெரால்ட் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
வானியல் நிகழ்வுகளை
பார்ப்பதற்காக டெலஸ்கோப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீராம் மற்றும் பிஜுராஜ் ஆகியோர் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை செய்திருந்தனர்.
இந்த ஜனவரி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் முதல் வாரம் ஆகிய நாட்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து ஏழு கிரகங்களின் வரிசை வானில் காட்சி தரும்.
இந்த நிகழ்வுகளை கோணம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேரடியாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்
வானியல் குறித்தபாடல்,
கோள்களின் நகர்வுகள் குறித்த கருத்துரை
பொதுமக்கள் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வினை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர்.



