சிவகங்கை, நவ. 25 –
சிவகங்கையில் நகர் தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தானம் முகாமை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ ராமானுஜ தாசி மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்.
தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாஷா, சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களது நபிகளாரின் சமுக உறவு புத்தகத்தை மேதகு ரானிக்கு வழங்கி கவுரவ படுத்தினார். முகாமில் கலந்து கொண்ட தமுமுகவினர் 50 யூனிட் ரத்தம் வழங்கினர்.
தமுமுக மாவட்ட தலைவர் துல்கர்னைசேட், தமுமுக மாவட்ட செயலாளர் இம்ரான் கான், மாவட்ட பொருளாளர் அன்சாரி, சிவகங்கை ஆர்சி நடுநிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜெபமாலை சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் டாக்டர் காஜா மைதின், மாவட்ட பொருளாளர் பிலால், மண்டல தொண்டர் அணி செயலர் ராஜா முகம்மது, சவுக்கத் அலி, நகர தலைவர் தமுமுக, மமக சித்திக் முகமது, நகர செயலாளர் தமுமுக ஷேக் பகுருதீன், நகர செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி முகமது மன்சூர் அலி, நகரம் பொருளாளர் தமுமுக மமக அசாருதீன் நகர் மருத்துவ சேவை அணி செயலாளர் தமுமுக ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் தமுமுகவில் பலர் மாநில செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர். சமூக ஆர்வலர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நகர் தலைவர் சவுக்கத் நன்றி கூறினார்.



