நாகர்கோவில் பிப் 5
நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பொது சுகாதாரம் குறித்த ஆலோசனைக்கூட்டம் மேயர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
நடைப்பெற்றது.கூட்டத்தில் உணவகம் மற்றும் தேநீர் கடைகளின் உரிமையாளர்களுக்கு வருகிற 15-01-2025 ம் தேதிக்குள் மாநகராட்சியின் மூலமாக வழங்கப்பட்ட வழிமுறைகள் கடைப்பிடிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.மீறும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அனைத்து விழிப்புணர்வு விளக்கங்களையும் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், முருகன், ராஜா ஆகியோர் கடை கடையாக சென்று எடுத்துரைத்து,
மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மாநகராட்சி மூலம் தொழில் உரிமம் பெற்று அவரவர் நிறுவனங்களில் வைத்திருக்க வேண்டும்,அனைத்து கடைகளிலும் உணவுப் பொருட்களின் விலை பட்டியல் பலகை வைக்க வேண்டும்,ஓடை மற்றும் நடைபாதை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்,சாலையோரம் இருக்கும் உணவகங்கள் சுகாதாரமான முறைகளில் உணவு பொருட்களை ஈ,கொசு மற்றும் தூசி படாதவாறு கண்ணாடி குவளையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். ஹோட்டல்களில் உணவு சமைக்கும் அடுப்பு போன்றவைகள் வெளிப்பகுதியில் இல்லாமல் கடையின் உள்பகுதியில் அமைத்து உணவு தயார் செய்யவும், உணவகங்களில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி முறையாக செலுத்தவும் அறிவுறுத்தியதுடன், பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்களை வைக்க கூடாது என்றும் விளம்பர பதாகைகள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். மேலும் பொது மக்களுக்கு இடையூறாகவும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் சாலை ஓரங்களிலும், கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்தி வைக்க கூடாது, கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தனர். உடன் மேற்பார்வையாளர்கள், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் இருந்தனர்.