புதுக்கடை, ஜன- 27
தேங்காப்பட்டணம் அருகே உள்ள தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜமாலுதீன் (65). இவர் சம்பவ தினம் அதே பகுதி 16 வயதுடைய பள்ளி மாணவன் ஒருவரை கையை பிடித்து இழுத்து கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடி சென்ற சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது குறித்து பெற்றோர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜமாலுதினை தேடி வந்தனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள மணக்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த ஜமாலுதீனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.