மதுரை நவம்பர் 23,
மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்
மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். பெருங்குடி வழியாக நிலையூர், சம்பகுளம், திருப்பரங்குன்றம், கைத்தறி நகர், பரம்புபட்டி ஆகிய ஊர்களுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இங்கு சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் விபத்துக்களை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பலமுறை புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பெருங்குடி கிராமத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விநோதமாக குண்டும் குழியுமான சாலையில் பெருங்குடி அதிமுக ஊராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உடனடியாக சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.