திருடர்கள் கைவரிசை தேனி மாவட்டம், நவம் – 20 தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒரே இரவில் பல்வேறு இடங்களில் ‘திருட்டு உத்தமபாளையம் பூக்கடைதெரு எனப்படும் பஜார் வீதியில் துணி கடை ஜவுளி கடை பூக்கடை பலக் கடை எலக்ட்ரிகல் கடை மெடிக்கல் என பல்வேறு மக்களின் பயன்பாட்டுக்கு தேவையான கடைகள் அதிக அளவில் காணப்படுகின்றன மேலும் மக்கள் கூடும் இடமாகும் உள்ளது .அவ் வீதியில் ஒரே இரவில் மர்ம நபர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட கடை மற்றும் பல்வேறு இடங்களில் கடையின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இச் சம்பவம் குறித்து திருடியவர்கள் ஒருவரா அதற்கும் மேற்பட்டவர்களா என காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்



