ராமநாதபுரம், மே 20 – தமிழகத்தில் தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம்
ராமநாதபுரம், மே 20 – தமிழகத்தில் தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ராமநாதபுரம்
மாவட்ட செயலாளர் (முன்னாள் எம்எல்ஏ) மு.முருகன் தலைமை வகித்தார். அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, பேரவை துணைத் தலைவர் முத்துராமலிங்கம், மருத்துவ அணி செயலாளர் கபிலன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் சேதுபதி வரவேற்றார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:
டாஸ்மாக் முறைகேடுகளை விசாரிக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை தடுக்கும் நோக்கில்
முதலமைச்சர் ஸ்டாலின்
நீதிமன்றம் வரை செல்வதை நிறுத்தி நியாயமான விசாரனைக்கு உதவ வேண்டும். தமிழகத்தில் இதுவரை இருந்த அரசுகளில் மிகவும் மோசமான அரசு தற்போதைய அரசு தான். முல்லை பெரியாறு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு கூறினார் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஏகோ முருகன் (செல்வநாயகபுரம்), அழகர்சாமி (சாம்பகுளம்), முத்துராமலிங்கம் (புளியங்குடி), வக்கீல் ஜோதிமுருகன் (சிக்கல்), பச்சைக்கண்ணு (சாயல்குடி), எம்.பிபாண்டி (கடலாடி), வெள்ளைத்துரை (கரிசல்குளம்), பேரூர் செயலாளர்கள் கருப்பணன் (முதுகுளத்தூர்) குட்டி (எ) மோகனபாலன் (கமுதி ), கமுதி ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ் சந்திர போஸ், ராமச்சந்திரன், முத்து, மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் சுந்தரமூர்த்தி, அபிராமம் குமணன், மாவட்ட துணைத் தலைவர் முனியசாமி (வாகைகுளம்), வழிவிட்டான் (மொச்சிகுளம்), சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் லத்தீப் உள்பட பலர் பங்கேற்றனர். ஆய்வு கூட்டத்திற்கு அதிக நிர்வாகிகளுடன் வந்திருந்த ஒன்றிய செயலாளர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டினார். மாவட்ட அவைத்தலைவர் சிவ. ராமச்சந்திரன் நன்றி கூறினார்.



