திருவாரூர் பிப்ரவரி 5,
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.மோகனசந்திரன், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்தும், நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் நலம் விசாரித்தார்.
அதனைத்தொடர்ந்து, நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுயினையும், நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டும் பணியினையும், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுவருவதையும், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும், முக்குளம் சாத்தனூர் காலணி தெருவில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரம் குறித்து நியாய விலைக்கடை ஊழியரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.
முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.283 இலட்சம் 96 ஆயிரம் மதிப்பீட்டில் 3.6 கி.மீ தூரம் முக்குளம் சாத்தனூர் மற்றும் கருவாகுறிச்சி தளிக்கோட்டை இணைக்கும் சாலை பணிகள் நடைபெற்று வருவதையும், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுயினையும், கருவாகுறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பாரமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இச்செய்தியாளர் பயணத்தில், நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலெட்சுமி,சிவக்குமார், உதவி பொறியாளர் சசிரேகா, அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.