நீலகிரி. மார்ச்.21.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட அல்லி மாயார் ஆதிவாசி கிராமத்தில் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு மற்றும் நெகிழியை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் துண்டு பிரசுரங்கள் வினியோகம் ஆகியவை ஆதி நிலம் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைவருக்கும் போதையை தவிர்த்து வாழ்க்கையில் உயர்வாக வாழவும், நெகிழியை ஒழித்து இயற்கை மற்றும் வன உயிரினங்களை வாழ வழி செய்ய வேண்டும் எனவும் நோக்கத்திற்காக போதை ஒழிப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆதி நிலம் அமைப்பை சேர்ந்த வீரப்பன், கருப்புசாமி, பிரியங்கா, தமிழரசன், , நாகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக அப்பகுதியில் வனப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் அல்லிமாயார் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த பழங்கு மக்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அப்பகுதி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



