வேலூர்=20
வேலூர் மாவட்டம் ,அடுக்கம்பாறை மதுரா அ.கட்டுபடி ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரபெருமானின் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கோ பூஜை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமங்கள், மங்கள இசை வாத்தியம் முழங்க முனீஸ்வர பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகமும் தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நாட்டாண்மைதாரர்கள் ஜே .சிவகுமார், கே. வெங்கடேசன், பொருளாளர் ஆர். சுதாகர் ,செலவாதி எம் .அசோகன், ஆர். ராமமூர்த்தி ,எஸ். நாகேந்திரன், கே.டி. குமார், ஆர் .ஜெயக்குமார் ,ஆர். ஜான்சன், கே. நவீன், எஸ். தினகரன், மற்றும் இளைஞர்கள் ,பக்தர்கள் ,விழா குழுவினர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.



